முத்தம் தருவதாகச் சொல்லி
பேசிப் பிரிந்த அவசரத்தில்
உதடு சுழித்து
ஏமாற்றிச் சென்றாய்
நீ தராது சென்ற முத்தத்தை விட
அதிகம் சுவைத்தது
நீ சுழித்த உதடு
---------------------------------------------------
உன் கூந்தலிலிருந்து
வாடிய பூக்களைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்
உதடு சுழித்து
ஏமாற்றிச் சென்றாய்
நீ தராது சென்ற முத்தத்தை விட
அதிகம் சுவைத்தது
நீ சுழித்த உதடு
---------------------------------------------------
உன் கூந்தலிலிருந்து
வாடிய பூக்களைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்
---------------------------------------------------
ஏன் முத்தம் கொடுத்தோம்
என்றாகிவிட்டது
இப்போது
எவருடனும் பேசப்
பிரியப்படவில்லை
இதழ்கள்
---------------------------------------------------
எத்தனை
கோபமென்றாலும்
ஒரு முழம் மல்லிகைக்கே
மயங்கிவிடுகிறாய்
நீ
நானும்
---------------------------------------------------
கடற்கரையில்
தன் தலையில் தானே
மண்ணள்ளிப் போட்டு
விளையாடும்
குழந்தையையும் என்னையும்
மாறி மாறிப் பார்க்காதே
---------------------------------------------------
உன் அம்மாவின்
அதட்டலுக்குப் பயந்து
அவசரமாய்
சன்னலிலிருந்து
விலகிப் போனாய்
நான்
பார்த்து ரசிப்பதற்காக
உன்னை
அங்கேயே விட்டுவிட்டு
---------------------------------------------------
சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு
சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்
---------------------------------------------------
ஒவ்வொரு நாளின்
நிலவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நாம் இருவரும் சேர்ந்து
முதன் முதலாய் பார்த்த
அந்த முழு நிலவை
---------------------------------------------------
என் குழந்தைக்கு
உன் பெயரை வைப்பதில்
விருப்பமில்லை எனக்கு
என்றேனும்
குழந்தையை
அதட்ட நேரிடலாம்
---------------------------------------------------
நினைவேட்டில்
எழுதும்போது
அழுதிருக்கவேண்டாம்
நீ
அழிந்த கையெழுத்து
சொல்லிக் கொண்டிருக்கிறது
நீ சொல்லாத
காதலை
---------------------------------------------------
நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424
விலை : ரூ.80/-
ஏன் முத்தம் கொடுத்தோம்
என்றாகிவிட்டது
இப்போது
எவருடனும் பேசப்
பிரியப்படவில்லை
இதழ்கள்
---------------------------------------------------
எத்தனை
கோபமென்றாலும்
ஒரு முழம் மல்லிகைக்கே
மயங்கிவிடுகிறாய்
நீ
நானும்
---------------------------------------------------
கடற்கரையில்
தன் தலையில் தானே
மண்ணள்ளிப் போட்டு
விளையாடும்
குழந்தையையும் என்னையும்
மாறி மாறிப் பார்க்காதே
---------------------------------------------------
உன் அம்மாவின்
அதட்டலுக்குப் பயந்து
அவசரமாய்
சன்னலிலிருந்து
விலகிப் போனாய்
நான்
பார்த்து ரசிப்பதற்காக
உன்னை
அங்கேயே விட்டுவிட்டு
---------------------------------------------------
சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு
சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்
---------------------------------------------------
ஒவ்வொரு நாளின்
நிலவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நாம் இருவரும் சேர்ந்து
முதன் முதலாய் பார்த்த
அந்த முழு நிலவை
---------------------------------------------------
என் குழந்தைக்கு
உன் பெயரை வைப்பதில்
விருப்பமில்லை எனக்கு
என்றேனும்
குழந்தையை
அதட்ட நேரிடலாம்
---------------------------------------------------
நினைவேட்டில்
எழுதும்போது
அழுதிருக்கவேண்டாம்
நீ
அழிந்த கையெழுத்து
சொல்லிக் கொண்டிருக்கிறது
நீ சொல்லாத
காதலை
---------------------------------------------------
நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424
விலை : ரூ.80/-
very nice thoughts....
ReplyDeleteவரிகள் அனைத்துமே காதலிக்கின்றன... உங்கள் கைவண்னத்தில்... அருமை...
ReplyDeletevery nice & Cute Fellings
ReplyDeleteஅனைத்தும் அருமை படித்தவுடன் பிடித்தது ரசித்தேன் நன்றி
ReplyDelete