Saturday, October 9, 2010

அப்படிப் பார்க்காதே...

முதல் கவிதைத் தொகுப்பிலிருந்து...

முத்தம் தருவதாகச் சொல்லி
பேசிப் பிரிந்த அவசரத்தில்
உதடு சுழித்து
ஏமாற்றிச் சென்றாய்

நீ தராது சென்ற முத்தத்தை விட
அதிகம் சுவைத்தது
நீ சுழித்த உதடு
---------------------------------------------------

ன் கூந்தலிலிருந்து
வாடிய பூக்களைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்
 ---------------------------------------------------

ன் முத்தம் கொடுத்தோம்
என்றாகிவிட்டது

இப்போது
எவருடனும் பேசப்
பிரியப்படவில்லை
இதழ்கள்

 ---------------------------------------------------


த்தனை
கோபமென்றாலும்
ஒரு முழம் மல்லிகைக்கே
மயங்கிவிடுகிறாய்
நீ
நானும்

 ---------------------------------------------------

டற்கரையில்
தன் தலையில் தானே
மண்ணள்ளிப் போட்டு
விளையாடும்
குழந்தையையும் என்னையும்
மாறி மாறிப் பார்க்காதே

 ---------------------------------------------------

ன் அம்மாவின்
அதட்டலுக்குப் பயந்து
அவசரமாய்
சன்னலிலிருந்து
விலகிப் போனாய்

நான்
பார்த்து ரசிப்பதற்காக
உன்னை
அங்கேயே விட்டுவிட்டு

 ---------------------------------------------------

சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு
சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்

 ---------------------------------------------------

வ்வொரு நாளின்
நிலவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நாம் இருவரும் சேர்ந்து
முதன் முதலாய் பார்த்த
அந்த முழு நிலவை

 ---------------------------------------------------

ன் குழந்தைக்கு
உன் பெயரை வைப்பதில்
விருப்பமில்லை எனக்கு

என்றேனும்
குழந்தையை
அதட்ட நேரிடலாம்

 ---------------------------------------------------

நினைவேட்டில்
எழுதும்போது
அழுதிருக்கவேண்டாம்
நீ

அழிந்த கையெழுத்து
சொல்லிக் கொண்டிருக்கிறது
நீ சொல்லாத
காதலை


 ---------------------------------------------------

நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424


விலை : ரூ.80/- 

4 comments:

  1. வரிகள் அனைத்துமே காதலிக்கின்றன... உங்கள் கைவண்னத்தில்... அருமை...

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை படித்தவுடன் பிடித்தது ரசித்தேன் நன்றி

    ReplyDelete