உன்னைப் பற்றியே
நினைத்துக்கொண்டிருக்க
உன்னையே
பார்த்துக்கொண்டிருக்க
உன்னுடனேயே
பேசிக்கொண்டிருக்க
போதும்
இந்த இரவும்
ஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்
*
நீண்ட வாக்கியத்தில்
ஒரு சொல்லில்
ஒவ்வோர் எழுத்திலும்
பிரதிபலிக்கிறது
உனது சாயல்
சாயல்களற்ற
உன்னை
ஒரேயொரு முறை
எழுத முடிந்தால்போதும்
வேறெதுவும் தேவையில்லை
இந்தக் கவிதைக்கு
*
உன்னோடு
பேசவியலா
தருணங்களில்தான்
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
*
உன்னைப்
பார்க்கும்போதெல்லாம்
ஒரு பறவையாகிறேன்
நீ என்னைப்
பார்க்கும்போதோ
என் சிறகசைவை
நிறுத்திவிட்டு
உன் அந்தரத்தில்
மிதக்கிறேன்
*