Wednesday, November 2, 2011

கொஞ்சம் காதல் கவிதைகள்



















உன்னைப் பற்றியே
நினைத்துக்கொண்டிருக்க
உன்னையே
பார்த்துக்கொண்டிருக்க
உன்னுடனேயே
பேசிக்கொண்டிருக்க

போதும்
இந்த இரவும்
ஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்
*

நீண்ட வாக்கியத்தில்
ஒரு சொல்லில்
ஒவ்வோர் எழுத்திலும்
பிரதிபலிக்கிறது
உனது சாயல்

சாயல்களற்ற
உன்னை
ஒரேயொரு முறை
எழுத முடிந்தால்போதும்
வேறெதுவும் தேவையில்லை
இந்தக் கவிதைக்கு
*

உன்னோடு
பேசவியலா
தருணங்களில்தான்
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
*

உன்னைப்
பார்க்கும்போதெல்லாம்
ஒரு பறவையாகிறேன்

நீ என்னைப்
பார்க்கும்போதோ
என் சிறகசைவை
நிறுத்திவிட்டு
உன் அந்தரத்தில்
மிதக்கிறேன்
*

12 comments:

  1. அன்பரே
    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து ஒரு பதிவு..தொட்டியில் இருந்த செடி திடீரென மொட்டுவிட்ட களிப்பு எனக்கு..
    அதுவும் ஒரு காதல் பதிவாகிப்போனதில் கொஞ்சம் கூடுதல் உந்தல் எனக்குள்...
    தொடர்ந்து பகிரவும்...:)

    ReplyDelete
  2. நீண்ட வாக்கியத்தில்
    ஒரு சொல்லில்
    ஒவ்வோர் எழுத்திலும்
    பிரதிபலிக்கிறது
    உனது சாயல்

    காதலின் அழகிய வரிகள்!

    ReplyDelete
  3. நீநீண்ண்டட இடைவெளிக்கு பிறகு உங்கள் கவிதையை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    மிக அழகான காதல் வரிகளாய் கவிதை. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  4. //சாயல்களற்ற
    உன்னை
    ஒரேயொரு முறை
    எழுத முடிந்தால்போதும்
    வேறெதுவும் தேவையில்லை
    இந்தக் கவிதைக்கு//

    //என் சிறகசைவை
    நிறுத்திவிட்டு
    உன் அந்தரத்தில்
    மிதக்கிறேன்//

    ரசித்த வரிகள் .. வாழ்த்துகள்.. நல்ல கவிதை .. நேரம் கிடைத்தல் என்னுடைய பதிவின் பக்கம் வந்து வாசித்துக் கருத்து இடுங்கள் ..

    ReplyDelete
  5. உன்னோடு
    பேசவியலா
    தருணங்களில்தான்
    கவிதைகள்
    எழுதிக்கொண்டிருக்கிறேன்

    இந்த இரவும்
    ஒரு நிலவும்
    சில மழைத்துளிகளும்

    அழகு ;);););)

    ReplyDelete
  6. உன்னோடு
    பேசவியலா
    தருணங்களில்தான்
    கவிதைகள்
    எழுதிக்கொண்டிருக்கிறேன்

    இந்த இரவும்
    ஒரு நிலவும்
    சில மழைத்துளிகளும்

    அழகு ;);););)

    ReplyDelete
  7. நன்றி... உங்கள் ரசனைக்கு..

    ReplyDelete
  8. நீ என்னைப்
    பார்க்கும்போதோ
    என் சிறகசைவை
    நிறுத்திவிட்டு
    உன் அந்தரத்தில்
    மிதக்கிறேன்//
    realllyyyyyyy superup

    ReplyDelete
  9. இந்த இரவும்
    ஒரு நிலவும்
    சில மழைத்துளிகளும்

    ReplyDelete
  10. உன்னோடு
    பேசவியலா
    தருணங்களில்தான்
    கவிதைகள்
    எழுதிக்கொண்டிருக்கிறேன்

    காதலின் அழகிய வரிகள்!

    ReplyDelete
  11. இந்த இரவும்
    ஒரு நிலவும்
    சில மழைத்துளிகளும்

    ReplyDelete